புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்
இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளைஅழித்தவர்கள் இன்று அதே எதிரியாக விளங்கிய புலிகளை தேடும் கால மாற்றம் நிகழ்ந்துள்ளது
அவர் தம் ஆட்சியும் ,அதிகாரமும் இலங்கையில் மீள நிலை நிறுத்த முடியா நிலைக்கு சென்றுள்ள இந்த கால கட்டத்தில் , எதிரி என பறையடித்து இனவாதம் பேசிய இதே வாய்கள் இன்று அதே எதிரிகளை தேடும் பரிதாபம் நிகழ்கிறது
புலிகளின் பீதியிலும் ,அரசுகள் கக்கிய இனவாதத்தில் உறைந்து கிடந்த சிங்களவர்கள் இப்பொழுதும் நாட்டில் எதிரிகளின் அச்சம் இல்லை என்ற நிலையில் உலாவி வந்தனர்
இது தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியதுடன் ஆட்சிகளை தூக்கி எறியும் நிலைக்கு வித்திட்டுள்ளது
சிங்கள இனவெறியுடன் அதே மக்கள் தம்மை காப்பார்கள் என எண்ணிய மகிந்த குடும்பம் ,இன்று அதே மக்களினால் எதிரியாக பார்க்க பட்டு தூக்கி வீச படும் நிலையில்
இப்பொழுது புலிகள் ஆயுத போரட்டத்தை உச்சரிக்க வேண்டிய தேவையும் .,சிங்கள மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியமும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது
அதற்கு ஆயுத குழுக்கள் தேவை படுகிறது ,எதிர் பாரத இடத்தில எதிர் பாராத தாக்குதல்களை எதிரியின் பெயரினால் நடத்திட வேண்டிய நிலையில் கோட்டா அரசு உள்ளது
அதனை இப்பொழுது செய்திட முடியா நிலையில் தவிக்கிறது ,அது அவர்கள் ஆட்சிக்கு மேலும் களங்கத்தை விளைவிக்கும் ,அதனால் புதிதாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்க
குண்டு வெடிப்புக்கள்,முஸ்லீம் தீவிரவாதத்தை மீளவும் நாட்டுக்குள் திணிக்க கோட்டா விளைவார்
புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்
அதற்காக தனது ஆயுத வளங்களையும், கூலி குழுக்களையும் உருவாக்குவார்,நாடு மீளவும் குண்டு சத்தங்களினால் அதிரும் காலம் உருவாகும் ,
அதனை உருவாக்கும் என்பதே புத்தி கெட்டவர்களில் சக்தியில் இருந்து தெரிகிறது,எதிர் வரும் ஆட்சி குண்டுகளினாலும் ,பட்டினியாலும் தவிக்கும் நிலை உருவாக்கம் பெற போகிறது ,
இங்கு எதிர் எதிர் அரசியல் படுகொலைகள் மீள அரங்கேற போகிறது,பின்புலத்தில் ராஜபக்ஸ முகங்கள் ஒளிந்து கிடக்கும் ,புலிகளை அழித்து வீர் வசனம் பேசியவர்கள்
இன்று அதுவே கோழைத்தனம் என்பதை பட்டுணர்ந்து தெரிந்து கொண்டதன் பின்னர்,பாவிகளாக அழுகின்றனர்
புலிகள் பெயரில் புதிய தாக்குதல்களை தாமே நடத்தி ,அதனை எதிரிகளான புலிகள் தலையில் சுமத்தி விடும் நிலைக்கு கோட்டா ,ராஜபக்ஸா குடும்பம் செல்ல போகிறது
போரை முடித்தவர்கள் போரை ஆரம்பித்து வைக்கும் புதிய காலம் ஒன்று உருவாக்கம் பெற போகிறது
காத்திருந்து பாருங்கள் காட்சிகளின் அகோரத்தை .எழுதி வைத்து கொள்ளுங்கள் எரிய போகிறது இலங்கை .
இது பர பரப்பு அல்ல பயன் பாடுகளின் பயணங்கள் …..அரசியல் என்பது தலைக்கீழ் மாற்றங்களின் சுழற்சி !
எதிரி எப்பொழுதும் எதிரி தான் என்பதற்கு எதிர் காலம் எழுத போகிறது ,எதிர்த்தவர்களின் வரலாற்றை .
- வன்னி மைந்தன் –
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
- லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
- ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்
- ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா