மாணவர்களை அடிக்கும் அமெரிக்கா பொலிஸ்
மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ் ,இஸ்ரேல் இராணுவ தாக்குதலுக்கு எதிராக ,போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக மாணவர்களை அடிக்கும் அமெரிக்கா பொலிஸ் அராயகம் .
இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் இராணுவ தாக்குதலினால் பாலஸ்தினம் காசா மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் .
,அவ்வாறான மக்கள் மீது நடத்த படும் இனப்படுகொலை தாக்குதலை நிறுத்த கோரி ,அமெரிக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
ஜனநாயக வழியில் போராட்டத்தை நடத்தும் மக்கள் மீது ,வன்முறை தாக்குதலை அமெரிக்கா பொலிசார் நடத்தி வருகின்றனர் .
அதனை அடுத்து தற்போது ,அமெரிக்கா காவல்துறை மாணவர்கள் மீது நடத்தும் இந்த தாக்குதல் மிக பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் கொலைகளை ஆதரிக்கும் அமெரிக்கா
இஸ்ரேல் கொலைகளை ஆதரிக்கும் அமெரிக்கா நிலை பாட்டுக்கு எதிராக வரும் நாட்களில் மக்கள் போராட்டம் மேலும் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த அடக்குமுறைகள் ஊடக ஆதிக்க சக்திகளின் இரும்பு கரத்தில், எவ்வாறு அப்பாவி மக்கள் சிக்கி சீராழிந்து வருகின்றனர் என்பதற்கு ,இவை சிறந்த முன்னுதாரணமாக காண படுகின்றன .
மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ் தாக்குதல் காணொளிகள் ,சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .
இதில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதும் ,மக்கள் ,மாணவர்கள் மீது அமெரிக்கா காவல்துறையினர் பொல்லுகளினால் தாக்குதல் நடத்துவதையும் காண முடிகிறது .
அமைதி வழியில் இடையூறு இன்றி போராட்டம் நடத்திய மக்களை இவ்விதம் நசுக்கும் திகைக்கும் காட்சிகளை வெளியிட பட்டுள்ளன ..
இஸ்ரேலிய போருக்கு ஆதரவாக அமெரிக்கா பிரிட்டன் என்பன தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றன .
அவ்வாறான நிலையில் மாணவர்களை அடக்கி ஆளும் அதிகார துஸ்பிரயோகம் மேற்கொள்ளும் அமெரிக்கா பொலீஸ் செயல்பாடுகள் ,உலகலாவிய மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .