Search Results for: தட்டுப்பாடு
மின்சார தட்டுப்பாடு தெருவிளக்குகளை அணைக்கும் அரசு
மின்சார தட்டுப்பாடு தெருவிளக்குகளை அணைக்கும் அரசு
மின்சார தட்டுப்பாடு தெருவிளக்குகளை அணைக்கும் அரசு ,தெருவிளக்குகள் அணைக்கப்படுவது விபத்துகளையும் பாதுகாப்பு அபாயங்களையும் தூண்டக்கூடும் என மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எச்சரிக்கை
அரசாங்கத்தின் முடிவு
மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தெருவிளக்குகளை அணைக்கும் அரசாங்கத்தின் முடிவு, பொதுப் பாதுகாப்பையும் நலனையும்
எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும் என்று எச்சரித்து, இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் (CMA) கவலைகளை எழுப்பியுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மாலை
நேர உச்ச நேரங்களில் தெருவிளக்குகள் குறைக்கப்படுவது, சாலை விபத்துகள் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்று சங்கம் எச்சரித்துள்ளது.
CMA தலைவர் விரந்த அமரசிங்க கையொப்பமிட்ட அந்தக் கடிதத்தில், சாலைகளில் குறைந்த பார்வைத் திறன், வாகன ஓட்டிகள், குறிப்பாக
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், அதே நேரத்தில், குறிப்பாக பெண்களுக்கு எதிரான
துன்புறுத்தல்களை ஊக்குவிக்கும் சூழ்நிலைகளையும் உருவாக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முடிவு எடுக்கப்பட்டபோது நாங்கள்
2022-ல் இதேபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டபோது நாங்கள் எங்கள் எதிர்ப்பை எழுப்பியிருந்தோம். இந்தக் கதையின் வேடிக்கையான பகுதி
என்னவென்றால், கடந்த காலத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு விரோதமாக இருந்த சில உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.
இது காவல்துறை அதிகாரிகள் பிழைத்து வாழ்வதற்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகுப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்,” என்று அமரசிங்க தனது கடிதத்தில் கூறினார்.
சமிக்ஞை விளக்குகள், அறிவிப்புப் பலகைகள் மற்றும் தெருவிளக்குகளுக்கு சூரிய சக்தியைப் பயன்படுத்த சங்கம் பரிந்துரைத்தது.
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
எரி பொருள் தட்டுப்பாடு ஏற்படாது
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது ,நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
“மக்களுக்கு சொல்ல விரும்புவது, எந்த பிரச்சனையும் இல்லாமல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை நாங்கள் முன்பதிவுகள் செய்துள்ளோம். அந்த முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் எந்த காரணத்தினாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. பிரச்சனை என்னவென்றால், எரிபொருள் எந்த இடங்களிலிருந்து வருகிறது என்பதுதான்.
அதற்கு பிறகு, போரின் தாக்கம் இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.” என்றார்.
அத்துடன் தற்போதைய நிலைமையில், சட்டவிரோதமாக எரிபொருள் கையிருப்பு வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார்.
“எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவது போர் நடக்கும் பிராந்தியத்திலிருந்து அல்ல.
அந்த எரிபொருள் மலேசியா, சிங்கப்பூர், இந்தியாவில் இருந்து வருகிறது.
ஒரே ஒரு இறக்குமதி ஓமானிலிருந்து செய்யப்பட்டது. அதுவும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை.
நாங்கள் அந்த விநியோகஸ்தர்களிடம் பேசி, அதை முழுமையாக உறுதி செய்துள்ளோம். டீசல் விடயத்திலும் அப்படித்தான். எந்த சிக்கலும் இல்லை” என்றார்.
உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி
உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி
உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி ,உணவுத் தட்டுப்பாடு தள்ளாடி வரும் ஆட்சி நிலை இப்பொழுது சந்தி சிரிக்கிறது.
நாட்டில் உப்பு விலை அதிகரிப்பு காரணமாகவும் ,உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் பேக்கரி உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமம் சங்கம் தெரிவிக்கிறது .
இதனால் மக்கள் அன்றாடம் விரும்பி உண்ணும் அத்தியாவசிய பொருளாக விளங்க கூடிய ,மாவிலான உற்பத்திகள் சந்தைப்படுத்தல் பாதிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி சங்கம் தெரிவிக்கிறது.
பாண் உற்பத்தி பாதிப்பு
இலங்கையில் ,காலை, மாலை ,என மக்கள் அதிகம் பானை வாங்கி கொண்டு வருகிறார்கள்.
இந்த பேக்கரிகள் தற்பொழுது அடித்த பூட்டப்படுவதால் இந்த உப்பு தட்டுப்படும் காரணமாக செயல் இழந்து காணப்படுவதால் மக்கள் சொல்லல துயரை சந்தித்து வருகிறார்கள்.
இப்பொழுது உப்பு தட்டுப்பாடு
உப்பு தட்டுப்பாடு காரணமாக அனுரா ஆட்சி தள்ளாடி வருவதையும் மிக விரைவில் அனுராவதி ஆட்சி கவிழ்க்கப்பட்ட போவதற்கான முன்னேற்பாடு அறிகுறியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
தேர்தல் முடிந்ததும் நாட்டையும் நாட்டு மக்களிடம் சார்ந்தும் பயணிக்க மறந்து இனவாதத்தைக் காக்கி ,மஹிந்த குடும்பத்தை போன்று ஆதிக்க வெறியுடன் ஆளுகின்ற அணு ஆட்சி விரைவில் கவிழ்க்கப்பட போகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகிறது .
தொடர்ந்தும் இப்படி நிகழ்ந்தால் அறகலிய போராட்டம் ஒன்று அனுராவுக்கு எதிராக வெடிக்கும் என்பதும், தமிழர்கள் சிங்களவர்கள் இணைந்து, இவர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தப் போகிறார் என்பதற்கான, முன்னேற்படாக இந்த உப்பு தட்டுப்பாடு ஒரு உதாரணமாக இருக்கிறது.
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்

- டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா ,நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. de S. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு
மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு
மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு ,அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் உர விலை அதிகரிப்பு என இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்தார்.
மேலும், தேங்காய் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி தொழில் துறைக்குத் தேவையான தேங்காய் இருப்புக்களை அவசரமாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு சுமார் 1 பில்லியன் டொலர் வருவாயை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய வர்த்தக சபை கேட்போர் கூடத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கூறிய விடயங்களை தெரிவித்தார்.
நாட்டின் மாதாந்திர தேங்காய் தேவை 250 மில்லியன் என்றும், அதில் 150 மில்லியன் தேங்காய்கள் உள்நாட்டு நுகர்வுக்கும், 100 மில்லியன் தேங்காய்கள் தொழில்துறைக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நாட்டின் வருடாந்திர மொத்த தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் கொட்டைகளாக இருந்த போதிலும், கடந்த ஆண்டு அது 2,680 மில்லியன் கொட்டைகளாகக் குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு தேங்காய்
உற்பத்தி 2,400 முதல் 2,600 மில்லியன் கொட்டைகளாகக் குறையும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 200 மில்லியன் தேங்காய் உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாக ஜயந்த சமரகோன் மேலும் தெரிவித்தார்.
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

பாராளுமன்றில் சண்டை அரிசி தட்டுப்பாடு
பாராளுமன்றில் சண்டை அரிசி தட்டுப்பாடு
பாராளுமன்றில் சண்டை அரிசி தட்டுப்பாடு,இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணமாக விளங்கியது கடந்தகால ஜனாதிபதி என பாராளுமன்ற இடம் பெற்றுள்ளது.
ஜனாதிபதியாக விளங்கிய ரணில் விக்ரமசிங்க அவருடைய ஆட்சிக் காலத்திலேயே இலங்கை நாடெங்கும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என எம்பி ஒருவர் ஒருவர் முள்ளங்கி தள்ளினார்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சிவப்பு அரிசி தட்டுப்பாடு காரணமாக விளங்கியது இவரது அரசு அது என்ன ஒரு குற்றம் சாட்டினார்.
இலங்கை ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கிய ரணில் விக்ரமசிங்க அவருடைய ஆட்சிக் காலத்திலேயே இந்த சிவப்பு அரிசி தட்டுப்பாடு ஏற்பட காரணமாக அமைந்ததாக எம்பி முழங்கினார்.
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை அதிலிருந்து மீள முடியாத நிலையையும் அவரை உருவாக்கியவர் என்பது இவரது கூற்று.
இதனை அடுத்து எந்த தாக்குதல் சம்பவம் பாராளுமன்றில் இடம்பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள காணொளிகளை பார்க்கும் நோக்குகின்ற பொழுது காணப்படுகிறது.
உப்புத் தட்டுப்பாடு
உப்புத் தட்டுப்பாடு
உப்புத் தட்டுப்பாடு இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 30,000 மெற்றிக் தொன்கள் வரை பதப்படுத்தப்படாத உப்பை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் உள்நாட்டு மற்றும் தொழில்துறை
தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போதுள்ள தீர்வை விகிதத்தின்படி, 30,000 மெட்ரிக் டன் கச்சா அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்து, சந்தைக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு, உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2025 ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இறக்குமதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்
எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.
நாட்டில் போதிய எரிபொருள் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமாக அந்தப்
பொறுப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும் தலைவர் ஜனக ராஜகருணா சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்கு எவ்வித சிக்கலும் இன்றி வலுசக்தியின் அவசியத்தை பேணுவதற்கு முடியும் என்றும், தற்போது எரிபொருள் குறைவடைந்ததும், உடனடியாக யுனைடெட் பெற்றோலியத்தின் 64 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருளை விநியோகிப்பதற்கு அமைச்சின் செயலாளர், யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் பெற்றோலியக்
கூட்டுத்தாபனம் ஆகியன ஒன்றிணைந்து இது தொடர்பாகக் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
நாட்டில் 111 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பில்
அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
”மூன்று மாதங்களுக்கு முன்னர் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
அது தற்போது 111 ஆக குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அந்த எண்ணிக்கை 70 ஆகக் குறைவடையும்” என அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யப் போதுமான நிதி உள்ளதா எனக் கேட்ட போது ” இலங்கை கடந்த வருடத்திலிருந்து கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத விடயம்.
நாம் இப்போது அதை சரிசெய்து கொண்டு இருக்கின்றோம். இந்நிலையில் நிதியை விடுவிப்பதில் சிறு சிக்கல்கள் இருக்கின்றன.
இருந்தாலும் திறைசேரியிலிருந்து மருந்துக் கொள்வனவுக்குப் போதுமான நிதியைப் பெற்று வருகின்றோம்” என அவர் தெரிவித்தார்.
மருந்து வகைகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை
மருந்து வகைகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை
சில மருந்து வகைகளுக்கான கேள்வி மனு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் , அவை நாட்டை வந்தடைய சில மாதங்கள் செல்லும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,தேவையான உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளில் எந்தத் தட்டுப்பாடும் இல்லையென செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான நீங்கிவிடும். மருந்து இறக்குமதிக்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மருந்து இறக்குமதிக்காக ஏழாயிரத்து 300 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, எதிர்காலத்தில் உள்நாட்டு மருந்து விநியோகஸ்தர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் மொத்த மருந்து விநியோகத்தில் 40 சதவீதமானவற்றை உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது இதன் நோக்கமாகும்.
தற்போது மருந்துத் தேவையில் 20 சதவீதமானவற்றை உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
வைத்தியசாலைகளில் மின் கட்டண கொடுப்பனவு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் பயன்படுத்தப்படும் உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளில் 14 மருந்துகள் உள்நாட்டில் காணப்படுகின்றமை..
அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளை
ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்
மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு
மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு
நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலைய மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரசாயன உரம், கிருமிநாசினி விலை உயர்வாலும் தொடர்ந்து மூன்று, நான்கு மாதங்களாக பெய்த மழையினாலும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி
உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்பொழுது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு
மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. அதிக விலை கொடுத்து மரக்கறிகள் கொள்வனவு
செய்வதற்கும் மரக்கறிகள் தேடி அலைய வேண்டியிருப்பதாகவும் அவ்வாறு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகளை
வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு விற்பனை
செய்வதற்கும் முடியாமல் இருப்பதாகவும் நுவரெலியா மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு
இலங்கையில் எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு
இலங்கையில் மீளவும் எரிபொருள் ,டீசல் மற்றும் ,பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய கூட்டு தாபனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில், எரிபொருள் மீள மோசனமான நிலைக்கு , செல்லும் எனவும் இவ்வேளை மக்கள் ,கொந்தளிப்புக்கு உள்ளாவார்கள் என எதிர் பார்க்க படுகிறது.
பல எரிபொருள் நிலையங்கள் அடித்து மூட பட்டுள்ள நிலையில் ,,வெளியாகியுள்ள இந்த எரிபொருள் அறிவிப்பு , மக்களை மீளவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கோட்டபாய எதிர்வரும் வாரம் , இலங்கை வரவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த எரிபொருள் அறிவிப்பு ,மீளவும் பெரும் போராட்டங்கள் வெடிக்க காரணமாகும் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவைகள் யாவும் முடக்க பட்டுள்ளது .இதனால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியால் தவித்து வருகின்றனர் .
மோசமான எரிபொருள் தட்டுப்பாடு
ஆட்டோ டாக்சி டிலிவரி செய்து பிழைத்து வந்த மக்கள் தமது தொழில் துறையை முற்றாக இழந்துள்ளனர் .
எரிபொருள் தட்டுப்பாட்டால் சீற்றத்தில் உள்ள மக்கள் ஆளும் அரசு மற்றும் அந்த அரச இயந்திரமாக செயல் பட்டு வரும் பொலிஸ் மக்களுக்குள் இடம்பெறும் மோதல் சம்பவம் பெரும் ஆபத்தான நிலையில் பயணிக்கிறது .
காவல்துறை இராணுவத்திற்கு எரிபொருள்
காவல்துறையினர் இராணுவத்தினர் தமது வாகனங்களில் சென்று எரிபொருளை நிரப்பி சென்ற வண்ணம் உள்ளனர் .

எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி அரசு
ஆனால் மக்கள் நாள்கணக்காய் காத்துக்கிடந்தும் அவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை .
எமக்கு வேண்டும் எரிபொருள்
இதனை எதிர்த்து கேள்வி கேட்ட சிங்கள மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளதுடன் அவர்கள் வண்டிகளும் சேதமாக்க பட்டுள்ளன .
தொடர்ந்து இந்த காவல்துறை இராணுவத்தின் அடக்குமுறைகள் நீடித்து சென்றால் அதுவே ஆளும் கோட்டபாய ரணில் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
மக்கள் அரச சொத்துக்கள் வங்கிகளை கொள்ளையடிக்கும் நிலை உருவாக்கம் பெறும் மிக பெரும் ஆபத்தான நிலைக்கு இலங்கைசென்ற வண்ணம் உள்ளது.
திட்டமிடப்படும் படுகொலைகள்
எரிபொருள் பெறும் காவல்துறை இராணுவத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் அது வன்முறையாக மாற்றம் பெறும் நிலை ஏற்பட்டால்,அங்கே துப்பாக்கி சூட்டு தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடலாம் .
இதன் பொழுது அப்பவி மக்கள் பலியாகும் நிலை ஏற்பட போகிறது.இந்த படுகொலை களம் திறக்க படவுள்ளது என்பதை அடித்து கூறுகிறோம் .
முதன் முதலாக சிங்கள மக்களை நேரடியா சிங்கள காவல்துறை இராணுவம் தாக்கும் சம்பவங்கள் இன்று அரங்கேற்ற பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் ,மீளவும் கோட்டாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
இவ்வேளை தமிழர்கள் மிக பொறுமையுடன் செயல் படுவது அவசியம் .அவ்வாறு தவறின் அப்பாவி தமிழர்கள் இதே சிங்கள இனவாத இராணுவத்தினரால் படுகொலை செய்ய படும் நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்க பட்டுள்ளன .
அசைந்து செல்லும் களமுனை அதன் திட்டமிடல் நிகழ்வு செயல்பாடுகள் தற்போது எதிர்வு கூறியவாறு செல்கிறது.
தயராகும் எரிபொருள் வன்முறை
எதிர்வரு சில நாட்களில் இதன் உக்கிரத்தை இலங்கை சந்திக்க போகிறது .நாம் முன்னர் கூறியது போன்று இலங்கை ஒரு மியான்மாராக மாற்றம் பெறப்போகிறது .
,இனவாத சிங்களத்தினால் தமிழர்கள் படு கொலை செய்ய படும் நிலையும் அவர்கள் சொத்துக்களும் சூறையாட படும் நிலையும் உருவாக்கம் பெற போகிறது.
இதனை புரிந்து கொண்டு தமிழர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.தமிழர்களே உங்கள் வீடுகளை தேடி இனவாத காடையர்கள் உள்நுழைவர்கள் அதனை எதிர்கொள்ள தயராக இருங்கள் .
- களமுனை ஆய்வு – வன்னி மைந்தன் –
இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு
கொழும்பு ;இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 200 மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .
தற்போது கையிருப்பில் உள்ள மருந்து பாவனை அதிகரிதத்தினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
மேலும் இரண்டு அல்லது மூன்று மதங்களில் 160 ,மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது .
இவ்வாறு தொடர்ந்து மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் இலங்கையில் மக்க அதிகம் பலியாகும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது.
மக்கள் பலிகளை தடுத்து நிறுத்திட ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விரைந்து செயல் பட வேண்டும் என கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் மக்களின் உயிர்களை காப்பற்றி வரும் மருந்து இறக்குமதி தடை பட்டால் இலங்கையில் மக்கள் போராட்டங்கள் அதிகம் வெடித்து பறக்கும்நிலை ஏற்பட போகிறது .
இது இலங்கை நாட்டில் என்றும் இல்லாத அளவுக்கு பெரும் போராக வெடிப்பதுடன் இந்த போராட்டங்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகும் நிலையம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கை நாட்டில் ல் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் ஒருபுறம் ,மறுபுறம் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு என தொடரும் அவலம் .
இறந்த பிணங்களை எரித்திட எரிபொருள் இன்றி மக்கள் தவிக்கும் பரிதாபம் என தொடரும் துயர்களை துடைத்திட ஆளும் ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்சே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகினால் மட்டுமே இந்த நிலைக்கு முடிவு காணலாம் என்பது மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது .
எரிபொருளுக்கு காத்திருந்து இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் மக்கள் தொழில் துறைகள் பாதிக்க பட்டுள்ளன .
அவ்விதமான தொடர்ச்சியாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவமனைகள் அடித்து பூட்டும் நிலை ஏற்படுவதுடன் தனியார் மருத்துவமனைகள் அதிக இலாபம் ஈட்டும் நிலைக்கு சென்று விடும் .
இந்த பேராபத்தில் இருந்து மக்களையும் இலங்கை நாட்டையும் ஆளும் ஜனாதிபதி கோட்டபாய அரசு எவ்வாறு காப்பாற்ற போகிறது என்பதே மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் சுகாதாரத்துறையில் முகாமைத்துவம் செய்ய முடியாத அளவுக்கு பாரிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில சுகாதார அமைச்சு இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை என்று சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்…
இந்த நேரத்தில், சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து குழுக்களையும் ,விசேட வைத்திய நிபுணர்களையும் இந்த நிர்வாகத் துறையில் இணைக்க முடியும்.
பங்குதாரர்கள் அனைவரும் இதை தமது பொறுப்பாகக் கருதி, கொவிட் காலத்தில் இருந்தே ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றனர். இது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் தெரிவித்தார்.
மருந்து வகைப்படுத்தலில் 14 வகையான மருந்துகள் பிரத்தியேகமாக இனங்காணப்பட்டுள்ளன. அவை மிகவும் முக்கியமான மருந்து வகைகள்.
இந்த சந்தர்ப்பத்தில் அவ்வகையான மருந்து வகைகள் நாட்டில் இல்லை என்றும் அவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாக பேசப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், அந்த 14 வகையான மருந்துகளுக்கும் இப்போதைக்கு தட்டுப்பாடு இல்லை என்று தன்னால் தெளிவாகக் கூற முடியும். இதில் ஒரு வகையான மருந்துக்கு மாத்திரம் தட்டுப்பாடு காணப்பட்டது.
அந்த தட்டுப்பாடும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுவருகிறது. இந்த மருந்துகளில் 25,000 நாளை நாட்டுக்கு கிடைக்க உள்ளன.
அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் 100,000 மருந்து சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
எனவே, அந்த 14 வகையான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறுவது தவறானது. 664 அத்தியாவசிய மருந்துகள் காணப்படுகின்றன.
அவற்றில் 51 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்ததுடன். அவை நேற்றைய தினம் 49 ஆக குறைந்துள்ளது.
இலங்கையில் மருந்து தட்டுப்பாடு
பிரச்சினைகள் இன்னும் சில நாட்களில் தீர்க்கப்படும். 49 அல்லது 50 வகையான மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் எங்களிடம் இருக்கின்றன.
வைத்தியசாலைக்கு வரும் கடுமையான நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படவில்லை என்பதை மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
விசேட வைத்தியர்கள் உட்பட சுகாதாரத் துறையில் பல பங்குதாரர்கள் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டிய அமைச்சர், இதன்போது மருந்துகளை கொள்வனவு செய்வதில் அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
அத்துடன், சுகாதாரத்துறையில் மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் விஞ்ஞான ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு தாம் தயாரில்லை.
இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் உலகெங்கிலும் உள்ள பல நண்பர்கள் இந்த நேரத்தில் பெருமளவில் நன்கொடைகளை வழங்க இணங்கியுள்ளனர்.
நாங்கள் ஆண்டு தோறும் சுமார் 260 மில்லியன் டொலர்களை மருந்து மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவழிக்கின்றோம்.
இதுவரை பல்வேறு துறைகளில் இருந்தும் 439 மில்லியன் டொலர்களை நாங்கள் பெற்றுள்ளோம். நேற்று அவுஸ்திரேலிய அரசாங்கம் சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவுக்காக மேலும் 50 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டது.
அதன் பின்னர் அடுத்த ஒன்றரை வருடத்திற்கு கண்டிப்பாக அந்நியச் செலாவணி பற்றாக்குறையில் இருந்து மருந்து கொண்டு வர முடியாது என்ற கதை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, அந்த சவாலுக்கு முகம்கொடுக்க நமது நண்பர்கள் உதவியிருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு 3 மாதங்கள் ஆகும். ஆனால், அது தற்போது 2 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளன.
இந்த 6 வாரங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் வரைதான் இந்தக் கஷ்டங்கள் இருக்கும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் விசேட வைத்தியர் தொடக்கம் சிற்றூழியர் வரை போக்குவரத்துப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் விசேட வைத்தியர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
தற்போது போக்குவரத்து அமைப்பு சாதகமான நிலையில் உள்ளதாகவும் இந்த வாரத்தில் தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நாடளாவிய ரீதியில் உள்ள 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதாரத் துறையின் விசேட வைத்திய நிபுணர்கள் தொடக்கம் தொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதற்கு
வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு
இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு
இலங்கை நட்டத்தில் எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும் என இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரம சின்கா தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றுகையில் ரணில் விக்கிரம சின்கா இவ்வாறு குறிப்பிட்டார்
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பொது மக்கள் தமது பயணங்களை வரையறுக்துக் கெகாள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறி கொடுத்து போனஸ் ஆசனம் மூலம் தெரிவான ரணில் இன்று இலங்கையில் பிரதமராக பதவி ஏற்றார்
இவரை ஆட்சியில் அமர்ந்த பின்னரும் நாட்டை மீள் இயல்பு நிலைக்கு எடுத்து செல்ல முடியவில்லை வீர வசனம் பேசி வரும் ரணில் தற்போது மக்கள் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பதில் படு தோல்வியை சந்தித்துள்ளார்
மக்களின் அத்தியாவசிய பொருள்கள் முதல் அனைத்தும் விலையும் அதிகரிக்க பட்ட நிலையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை தொடராக போராட்டம் நடத்தி வருகின்றனர்
இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைக்கு ராஜபக்சே குடும்பமே கரணம் என அனைத்து மக்கள் கூட்டாக தெரிவித்த வண்ணம் உள்ளனர்
தான் தோற்று போன ஜனாதிபதியாக பதவி விளக்க மாட்டேன் என கோத்தபாய ராஜபக்சே அரியணையில் அமர்ந்துள்ளார்
இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு
மக்களின் போர் கீரோவாக வலம் வந்து இன்று அதே மக்கள் மத்தியில் ஸீரோவான கோத்தபாய ஆட்சியில் பிரதமராக விளங்கி வரும் ரணிலின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பான தலைவர் மக்களை வீடுகளில் உட்க்காரும் படி தெரிவித்துள்ள செயல்பாடு கொதிப்புக்கு நிலைக்கு எடுத்து சென்றுள்ளது
இவரது இந்த செய்தி மக்களை சீண்டும் தந்திரோபாய தாக்குதல் நகர்வு என அரசியல் நோக்கர்கள் தெரி க்கின்ற்னர்
அனுதாப அலையின் ஊடக மக்களை தனது வச படுத்தி தனது கட்சியை பலப் படுத்துவதில் அக்கறை கொண்டுள்ள ரணிலின் இந்த நகர்வு கோத்தாபாயாவையும் கடுப்பில் உறைய வைத்துள்ளதுள்ளது
எரிபொருள் தட்டுப்பாடு – பேரூந்து பயணங்கள் முடக்க படும் அபாயம்
எரிபொருள் தட்டுப்பாடு – பேரூந்து பயணங்கள் முடக்க படும் அபாயம்
இலங்கையில் எரிபொருள் தட்டு பட்டது ஏற்பட்டுள்ள நிலையில் இன்று டீசல்
கிடைக்காவிடின் நாளை முதல் பயணிகள் பேரூந்துகள் போக்குவரத்து தடை படும் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆளும் அரசின் ஆட்சி காலத்தில் இலங்கை வரலாறுயுகாணாத பெரும் சீழிவை
சந்தித்து வருகிறது ,இதனால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
எரிபொருள் தட்டுப்பாடு- மரக்கறிகள் அழுகின
எரிபொருள் தட்டுப்பாடு- மரக்கறிகள் அழுகின
எரிபொருள் நெருக்கடி காரணமாக நுவரெலியாவில் மரக்கறி போக்குவரத்து
தடைப்பட்டுள்ளதாக அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார மத்திய
நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக வியாபாரிகள் நுவரெலியாவுக்கு
வராத காரணத்தினால் சில மரக்கறிகள் பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக்கு வந்தது
சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக்கு வந்தது
தற்சமயம் சந்தையில் சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கோதுமைமா போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்று
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்த்தன தெரிவித்தார்.
தற்போது துறை முகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு தாமதக்கட்டணம் இன்றி விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பண்டிகைக் காலத்தில் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு சகல
நடவடிக்கைகளுமள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி
காஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான காஸ் சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை. இதேவேளை, சிறிய அளவிலான
வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்தில் இருந்து தட்டுப்பாடின்றி காஸ் விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்திருக்கின்றது. கடந்த காலங்களில் நாளாந்த காஸ்
சிலிண்டர்களுக்கான கேள்வி சுமார் இரண்டு லட்சமாகக் காணப்பட்டது.
எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக காணப்படுகின்றது. இதன்படி, நிறுவனம் தற்போது நாளாந்தம் 90 ஆயிரம் காஸ் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கின்றது.
எனினும், இரண்டரைக் கிலோ எடைகொண்ட காஸ் சிலிண்டர்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறு தாமதம் நிலவுதாகவும் லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

































