2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்
உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சமாக அதிகரித்துள்ளது.
2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்
கோப்பு படம்
ஜெனீவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும்
பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் ஒரே நாளில்
சராசரியாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 64 லட்சத்து 15 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை
பெறுபவர்களில் 64 ஆயிரத்து 640 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 39 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால்
இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 54,14,660
பிரேசில் – 32,29,621
இந்தியா – 23,96,638
ரஷியா – 9,07,758
தென் ஆப்பிரிக்கா – 5,72,865
பெரு – 4,98,55
மெக்சிகோ – 4,98,380
கொலம்பியா – 4,33,805
சிலி – 3,80,034
ஸ்பெயின் – 3,79,799
- அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான்
- தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
- வாலிபன் மேல் விழுந்த இடி
- ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்
- அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
- எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்