பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி

பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி
Spread the love

பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி

வட மேற்கு ஸ்பெயின் பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்குள்,
பயணிகள் பேரூந்து வீழ்ந்து நொறுங்கியது .

இந்த விபத்தில் ஆறுபேர் பலியாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளனர் .

ஸ்பெயின் நாட்டின் Lugo பகுதியில் இருந்து Vigo பகுதிக்கு
பயணித்து கொண்டிருந்த பேரூந்து ,ஆற்றுக்கு மேலால் அமைக்க பட்ட ,
உயரமான பாலத்தை கடக்க முற்பட்ட வேளை ,


சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து ,பாலத்தின் பாதுகாப்பு கம்பிகளை
உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கியது .

பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி

இதன் பொழுது 63 வயதுடைய சாரதி உள்ளிட்ட
நால்வர் நீரில் அடித்து செல்ல பட்ட நிலையில்,
தீயணைப்பு வீரர்களினால் காப்பாற்ற பட்டு ,
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

விபத்தினை ஏற்படுத்திய சாரதி மீது,
நடத்த பட்ட சோதனையில் ,அவர் மதுவோ ,போதைவஸ்துக்களோ ,
அருந்தி இருக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் .

தொடர்ந்து விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து ,
தப்பியவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .