பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்
Spread the love

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

நேற்று நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

அத்துடன் கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றையும் சபாநாயகர் நேற்று சான்றுரைப்படுத்தினார்.

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும், 2023ஆம் ஆண்டின் ஆம் 34 இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகவும் நேற்று முதல் அமுலுக்கு வருகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு சந்தித்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன .

வரி அறவீடு மாறுதல் மூலமே நாட்டை கட்டி எழுப்ப முடியும் என ஆனாலும் அரசு கருதுகிறது .

அதனால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது .

வரும் காலங்களில் பாரிய மாற்றத்தை இலங்கை சந்திக்கும் என எதிர் பார்க்க படுவதால் ,இந்த மாறுதல் அவசர அவசரமாக மேற்கொள்ள படுகிறது .