அரசாங்க வேலைத்திட்டமே ஒரே வழி
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என பாராளுமன்றில் இன்று கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அரசாங்க வேலைத்திட்டமே ஒரே வழி
அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் உருவாக்கும் கற்பனைக் கதைகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
இவ்வாறான கற்பனைக் கதைகளில் சொல்லப்படும் விடயங்களை நிறைவேற்ற முயற்சிப்பதன் மூலம் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்