கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை
PCR பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்கள் இருவர் நேற்று (07)
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கடற்படை வீரர்கள் இருவரும், வெலிசறை கடற்படை முகாமில் கடமை புரிந்து வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் கொவிட் -19
தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து சிகிச்சைக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண
குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 07 பேர் கொழும்பு கடற்படை பொது
வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களின் பி.சி.ஆர் சோதனைகளில் இவர்களுக்கு வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி 2020 மே 06 ஆம் திகதி
அவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் மேலும், வைத்தியசாலைகளில் இருந்து
வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு
தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நபர்கள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 கடற்படை வீரர்கள் முழுமையாக
குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை