விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
Spread the love

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு.அமெரிக்கா விவசாயத் தணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அமெரிக்க உதவியுடன் உற்பத்தி

இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள்

அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்தார்.

ஐரோப்பா அமெரிக்கா நாடுகளில் விவசாயம் அதி நவீன முறையில் செய்கை முறைக்கு உள்ளாக்க படுகிறது .

அவ்வாறு இலங்கையில் நடைமுறை ப்படுத்தினால் ,தன்னிறைவு பொருளாதரத்தில் இலங்கை அதியுச்ச பயனை அடையும் என எதிர் பார்க்க படுகிறது .