மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது

மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது
Spread the love

மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது

கடந்த மாதம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் 06 வயது சிறுமி கொல்லப்பட்டு அவரது தந்தை படுகாயமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சேதவத்தை பகுதியிலிருந்து காரில் பயணித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியில் கைவிடப்பட்ட காரை விசே் அதிரடிப்படையினர் மீட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் என மூவரைக் கைது செய்துள்ளனர்.

மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது

செப்டெம்பர் 17ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது தந்தை படுகாயமடைந்தார். வழக்கு ஒன்று தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும் போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

உயிரிழந்த சிறுமியின் தந்தைக்கே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான 36 மற்றும் 65 வயதுடைய ஆதம் லெப்பை, மொஹமட் மின்ஹாஜ் மற்றும் செய்யது இஷாக் மன்சூர் ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசேட அதிரடிப்படை தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் CI நதீக்க சில்வாவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.