காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு

காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு
Spread the love

காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு

அடையாம் காணப்படாத சடலம் ஒன்று நேற்று (10) கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் 30-40 வயதிற்கிடைப்பட்ட ஆணொருவருடையதாக இருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு

குறித்த நபரின் அருகில் காவி நிறத்துணியொன்று காணப்பட்டதாகவும் அவர் மொட்டைத் தலையுடன் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் ஒரு பௌத்த பிக்குவினுடையதாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.