மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
Spread the love

மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

அலவத்துகொட, தொடங்கொல்ல பகுதியில் நேற்று (08) இரவு பெய்த அடை மழையில் வீடொன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

உயரமான பகுதியில் அமைந்துள்ள வீட்டின் முற்றத்தில் மண்சரிவு ஏற்பட்டதில், 15 அடி உயர மதில் சுவர் வீட்டின் கீழே உள்ள வீதியில் உடைந்து விழுந்ததில், அப்போது வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது விழுந்துள்ளது.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து விபத்தில் சிக்கியவரை அக்குரண வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அக்குரண, குருந்துகஹால பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ