கொரியா சென்ற 2000 இலங்கையர்கள்
கொரியா சென்ற 2000 இலங்கையர்கள் ,இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென் கொரிய வேலை
கடந்த 4 மாதங்களில் 2,064 பேர் தென் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்காக 1708 பேரும், மீன்பிடித் துறைக்கு 351 பேரும், கட்டுமானத் துறைக்கு 5 பேரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.
இவர்களில் 1,892 பேர் முதல் முறையாக தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் 41 யுவதிகளும் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி
இலங்கையின் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அடுத்து ,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களினால் ,வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி பல இலங்கையர்கள் செல்கின்றனர் .
அவ்விதம் தற்போது கொரியாவுக்கு பெரும் தொகையில் இலங்கையர்கள் சென்றுள்ளது குறிப்பிட தக்கது