பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி
இலங்கை வவுனியா, ஏ9 வீதியில் பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசார் விசேட சோதனை நடவடிக்கை
வவுனியா தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிசார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் .
அதன் போது ஏ9 வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றின் சாரதி மது போதையில் பேரூந்தை செலுத்தியமை கண்டு பிடிக்கப்பட்டது.
அதனை அடுத்தே சாரதி கைது செய்யப்பட்டார் ,இவ்விரு மதுபோதையில் பேரூந்தை செலுத்தி செல்வதனால் பல விபத்து சம்பவங்கள் ஏற்படுகின்றன .
எனினும் தெய்வாதீனமாக போலீசார் மேற்கொண்ட திடீர் வீதி சோதனை காரணமாக அந்த விபத்ஹு தவிர்க்க பட்டுள்ளது .
இதனையடுத்து பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேரூந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் சாரதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி சாரதியின் செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .