இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

9 இந்திய மீனவர்கள் கைது
Spread the love

இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .

இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ