ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி .இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய குண்டுவீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலியாகியுள்ளார் .
கடந்த தினம் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆளுகை பகுதிக்குள் ,தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த ,கலாஃப் என்கின்ற ,ஜமா இஸ்லாமியா அமைப்பில் மூத்ததளபதி ,இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
லெபனான் ஹிஸ்புல்லாவின் ஆளுகை பகுதிக்குள் தொடராக ,பலரை இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறை படுகொலை செய்து வருகிறது .
இவ்வாறு படுகொலை செய்ய பட்ட கலாஃப் என்கின்ற மூத்த தளபதி ,வடக்கு இஸ்ரேல் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ,முக்கிய மூளையாக செயல்பட்டவர் .
ஹிஸ்புல்லா ,ஹமாஸுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி , நாசகார தாக்குதல்களை இஸ்ரேலுக்கு நடத்திட தயாராகி கொண்டிருந்தவர் இவர் என ,இஸ்ரேல் மொசாட் அறிவித்துள்ளது .
அவ்வாறான மிக சக்தி வாய்ந்த முக்கிய தளபதியை ஹிஸ்புல்லா போர் அணிகள் ,இழந்துள்ளது என்கிறது இஸ்ரேல் .
தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல் .
முக்கிய தளபதிகளை படுகொலை செய்வதன் ஊடாக ,அந்த போர் அமைப்பை முற்றாக அழித்துவிடலாம் என்கின்ற, மொஸாட்டின் நடவடிக்கை வெற்றி பெறுகிறது என்கிறது மேற்குலகம் .
ஆனால் தளபதிகள் பலியானாலும் , இலக்கு நோக்கி நாங்கள் பயணிப்போம் என்கிறது போராட்ட அமைப்பினர் .
ஒருவாரத்தில் லெபனானுக்குள் நடந்த நான்காவது முக்கிய தளபதி படுகொலை சம்பவமாக இது அமைய பெற்றுள்ளது .
தாக்கியது எப்படி
இந்த தாக்குதல் தளபதி மீது தாக்குதல் நடத்தியது எப்படி என்பது தொடர்பில் ,தாக்குதல் நடத்தும் காணொளியை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது .
வாகனம் பயணித்து கொண்டுள்ளது ,அப்பொழுது அந்த பகுதி ஊடாக பறந்து வந்த ஆள் இல்லா உளவு விமன்ம் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்கிறது .
அப்பொழுது அந்த வண்டி தீப்பிடித்து வெடித்து எரிகிறது .சம்பவ இடத்திலேயே குண்டு பட்டு அவர் பலியாகியுள்ளார் .
யூத இராணுவத்தின் தாக்குதல் தளபதி ஒருவர் மீது வான்வெளி தாக்குதலை நடத்தி ஹிஸ்புல்லா படைகள் படுகொலை செய்திருந்தனர் .
அதன் பின்னர் இடம்பெற்ற தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .