ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி

ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
Spread the love

ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி

ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி .இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய குண்டுவீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலியாகியுள்ளார் .

கடந்த தினம் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆளுகை பகுதிக்குள் ,தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த ,கலாஃப் என்கின்ற ,ஜமா இஸ்லாமியா அமைப்பில் மூத்ததளபதி ,இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

லெபனான் ஹிஸ்புல்லாவின் ஆளுகை பகுதிக்குள் தொடராக ,பலரை இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறை படுகொலை செய்து வருகிறது .

இவ்வாறு படுகொலை செய்ய பட்ட கலாஃப் என்கின்ற மூத்த தளபதி ,வடக்கு இஸ்ரேல் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ,முக்கிய மூளையாக செயல்பட்டவர் .

ஹிஸ்புல்லா ,ஹமாஸுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி , நாசகார தாக்குதல்களை இஸ்ரேலுக்கு நடத்திட தயாராகி கொண்டிருந்தவர் இவர் என ,இஸ்ரேல் மொசாட் அறிவித்துள்ளது .

அவ்வாறான மிக சக்தி வாய்ந்த முக்கிய தளபதியை ஹிஸ்புல்லா போர் அணிகள் ,இழந்துள்ளது என்கிறது இஸ்ரேல் .

தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல் .

முக்கிய தளபதிகளை படுகொலை செய்வதன் ஊடாக ,அந்த போர் அமைப்பை முற்றாக அழித்துவிடலாம் என்கின்ற, மொஸாட்டின் நடவடிக்கை வெற்றி பெறுகிறது என்கிறது மேற்குலகம் .

ஆனால் தளபதிகள் பலியானாலும் , இலக்கு நோக்கி நாங்கள் பயணிப்போம் என்கிறது போராட்ட அமைப்பினர் .

ஒருவாரத்தில் லெபனானுக்குள் நடந்த நான்காவது முக்கிய தளபதி படுகொலை சம்பவமாக இது அமைய பெற்றுள்ளது .

தாக்கியது எப்படி

இந்த தாக்குதல் தளபதி மீது தாக்குதல் நடத்தியது எப்படி என்பது தொடர்பில் ,தாக்குதல் நடத்தும் காணொளியை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது .

வாகனம் பயணித்து கொண்டுள்ளது ,அப்பொழுது அந்த பகுதி ஊடாக பறந்து வந்த ஆள் இல்லா உளவு விமன்ம் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்கிறது .

அப்பொழுது அந்த வண்டி தீப்பிடித்து வெடித்து எரிகிறது .சம்பவ இடத்திலேயே குண்டு பட்டு அவர் பலியாகியுள்ளார் .

யூத இராணுவத்தின் தாக்குதல் தளபதி ஒருவர் மீது வான்வெளி தாக்குதலை நடத்தி ஹிஸ்புல்லா படைகள் படுகொலை செய்திருந்தனர் .

அதன் பின்னர் இடம்பெற்ற தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .