போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு

போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
Spread the love

போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு


போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம்.

சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்தது. சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

கொழும்பு ஐ.ரி.சி. ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் கட்டடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான அஸ்திரமாகவும் அது அமைந்திருக்கும். சுற்றுலா வியாபாரத்தினால் இலங்கையை துரிதமாக மீட்கலாம். அதற்கான வசதிகளை வழங்க நாம் தயார்.

அவ்வாறானதொரு மக்கள் போரட்டம் மீண்டும் ஏற்படாதவாறான பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். அதற்கு தேவையான திட்டங்களை நாம் செயற்படுத்துவோம். இந்த திட்டங்களால் பொருளாதாரத்தையும் நிலைப்படுத்த முடியும். அதனால் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடையும் என்றார்.

எதிர் வரும் தேர்தலில் மக்கள் ஆதாராவை பெற்றுக்கொள்ள ரணில் பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிட ஹக்கது .