877 சந்தேக நபர்கள் கைது

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Spread the love

877 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்ற (15) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 877 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் போது 475 கிராம் ஹெரோயின், 501 கிராம் ஐஸ் மற்றும் 126 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.