வாகன விபத்தில் நால்வர் காயம்

வாகன விபத்தில் நால்வர் காயம்
Spread the love

வாகன விபத்தில் நால்வர் காயம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (15) கார் ஒன்று, தரித்து நின்ற

முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

காத்தான்குடியை நோக்கி சென்ற கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த விபத்து இடம் பெற்றதாக அருகிலிருந்த பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பயணம் செய்த பயணிகள் மூவருமாக நால்வர் காயமடைந்துள்ளதோடு கார் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.