வேட்பாளர்கள் பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் சொத்துக்கள், பொறுப்பீடுகளை அறிவிக்க வலியுறுத்தல்
இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு
முன்னர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு அமர்வதற்கு அல்லது பாராளுமன்றத்துக்கு வாக்களிப்பதற்கு முன்னர், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஊடாக தமது
சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கவேண்டும்.
இதேபோன்று தேர்தல் பெறுபேறு மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவித்த பின்னர் ஓரு மாத
காலத்திற்குள் தெரிவுசெய்யப்படாத அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை வழங்கத்தவறும் வேட்பாளர்கள் குறித்து இலஞ்சம் மற்றும்
மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- கடை சுவையில் பராட்டோ செய்ங்க
- கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks