வாகன விபத்துக்களில் ஐவர் பலி

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
Spread the love

வாகன விபத்துக்களில் ஐவர் பலி

வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீரம்புகெதர, வாரியபொல, அச்சுவேலி, கம்பஹா மற்றும் வெலிமடை ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீரம்புகெதர, கிரலபொக்க பகுதியில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் செலுத்துனரும்

பின்னால் அமர்ந்து சென்றவரும் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.

வாகன விபத்துக்களில் ஐவர் பலி

இதேவேளை, வாரியபொல நகரில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் 69 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பலத்த

காயமடைந்து வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம் அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 21 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கம்பஹா மாபிம பகுதியில் வீதியில் பயணித்த பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வெலிமடை தம்புலன்கந்துர பிரதேசத்தில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பாறையில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதியும் மேலும் இருவர் பரணகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீடியோ