வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,23 ஏவுகணைகளை ஒரே நாளில் ஏவி சோதனை புரிந்துள்ளது .
இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா ,உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
தாம் அணு ஆயுத நாடு என்பதை வடகொரியா மீளவும் இடித்துரைத்து வருகிறது .
வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
அணு குண்டு பலம் பெறும் பொழுதே அமெரிக்கா போன்ற அடக்கியாளும் வல்லாதிக்க நாடுகள் மத்தியில் இருந்து, தப்பித்து கொள்ள முடியும் என்கின்ற வகையில், இந்த சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது .
வடகொரியாவின் தொடர் அத்துமீறல் ,உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றன .
என தெரிவித்து ,வடகொரியா மீதான தடைகளை ,மேலும் விதிக்க அமெரிக்கா தலைமையிலான நாடுகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன .
தடை மேல் தடைகளை தொடர்ந்து விதித்தால் என்ன ஆகும் என்பதை, இந்த வல்லாதிக்க நாடுகள் உணாந்து கொள்ளாத வரை ,வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்திட முடியாது என்பதே வெளிப்படை .