லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழ்ப் பெண் துஷா
பிரித்தானியா லண்டனில் மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு சக்கர நாற்காலியில் வாழும் நிலைக்கு ஆளான ஈழத்தமிழ்ச் சிறுமி துஷா.
துஷா ஆகிய நான் 5 வயதில் ஒரு கும்பலின் துப்பாக்கிச் சூட்டில் முடங்கிவிட்டேன்.இப்போது நான் சுட்டவர்களை சந்திக்க விரும்புகிறேன்.
ஏனென்றால் அவர்களிடம் ஏதாவது சொல்ல வேண்டும்.
தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள,தன் உறவினரின் மளிகைக்கடையில் விளையாடிக்கொண்டிருந்த போதே சூட்டுக்கு இலக்கானார் .
லண்டனில் மார்பில் துப்பாக்கியால் சுடப்பட் துஷா கமலேஸ்வரன் என்னும் அந்த ஐந்து வயது ஈழத்தமிழ்ச் சிறுமிக்கு, அன்று தன் வாழ்வே மாறப்போகிறது என்பது தெரியாது.
லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழ்ப் பெண் துஷா
அந்த கடைக்குள் நுழைந்த போதைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர், தங்கள் எதிராளி ஒருவரை துப்பாக்கியால் சுட,அந்த நபர் தப்பிக்கொள்ள, துப்பாக்கிக் குண்டு விளையாடிக்கொண்டிருந்த துஷாவின் மார்பைத் துளைத்துக்கொண்டு சென்று அவளது முதுகெலும்பைத் தாக்கியது.
இரத்த வெள்ளத்தில் சாய்ந்த துஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில்,அவளது முதுகெலும்பில் குண்டு தாக்கியதால்,அவளால் நடக்கமுடியாது என்னும் துயரச் செய்தி .
அவளது பெற்றோரான சசி மற்றும் ஷர்மிளா தம்பதியருக்குத் தெரிவித்தார்கள் மருத்துவர்கள்.
இது நடந்தது,2011ஆம் ஆண்டு. 2012ஆம் ஆண்டு துஷாவை சுட்ட Nathaniel Grant,Anthony McCalla மற்றும் Kazeem Kolawole ஆகிய மூவரும் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
தன்னை சுட்டவர்களிடம் துஷா கூற விரும்புவது.
தற்போது 18 வயதாகிறது துஷாவுக்கு. நடனத்தில் விருப்பம் கொண்ட துஷாவின் நடனக் கனவுகளை அந்த போதைக் கும்பல் கலைக்க பட்டது .
அவளால் இனி நடனமாட முடியாது.துஷாவின் இன்னொரு விருப்பம், மருத்துவராவது.தன்னைக் காப்பாற்றிய மருத்துவர்களைப் போல,தானும் ஒரு
மருத்துவராக விரும்புகிறார் என்கிறார் துஷா.
தன்னை சுட்டவர்களை சந்தித்து அவர்களிடம் சில விடயங்களைக் கூறவேண்டும் என விரும்புகிறார் துஷா.
அவர்களுடைய கண்களை நேருக்கு நேராக பார்க்க வேண்டும் .,சிறையிலிருந்தபோது அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள், தாங்கள் செய்த குற்றத்தின் விளைவுகளை அவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதை தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் அவர்.
சில விடயங்களுக்காக அவர்களை நான் மன்னிக்கிறேன், ஆனால்,சில விடயங்களுக்காக அவர்களை என்னால் மன்னிக்கமுடியாது என்கிறார் துஷா.
அவர்கள் என் பிள்ளைப்பிராயத்தின் சில பகுதிகளைத் திருடிவிட்டார்கள்.
லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழ்ப் பெண் துஷா
அவர்கள், நான் என்ன சாதித்துள்ளேன் என்பதைப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறும் துஷா, நான் கேம்பிரிட்ஜ் பல்கலையில் மருத்துவம் படிக்கிறேன் .
நான் என் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருக்கிறேன், அவர்கள் என்ன செய்கிறார்கள் என நான் பார்க்க விரும்புகிறேன் என்கிறார்.
ஒரு மருத்துவராகி, எனக்குக் கிடைத்த அக்கறையை, கவனிப்பை, என்னைப் போல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, நான் கொடுப்பேன், அதுதான் என் கனவு என்கிறார் துஷா.
மனம் சோர்ந்து போகாதது கனளவுகளை நெஞ்சுக்குள் புதைத்து விடாது எழுந்து நடக்கும் இந்த இளம் தமிழ் பெண் போற்றுலாத்துக்கு உள்ளானவர் ,அவரை எதிரி இணையமும் வாழ்த்துகிறது .
முடியம் என மோது முகில் முட்டும் மலையும் தகரும் .
நன்றி ஈழம் ரஞ்சன் .
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
- கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு