யாழ் தீவுகளுக்கு புதிய பஸ் சேவைகள்

Spread the love

வடக்கிலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த

பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தீவகங்களில் தற்போது மிகப்பழைய பஸ்களே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

புதிய பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை கிடைத்தவுடன் அவற்றைத் தீவுகளில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கில் போக்குவரத்துக்கான குழுவை விரைவில் ஸ்தாபித்து, அதற்குத் தேவையான வசதிகளையும்

ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து சேவையில் பற்றாக்குறை நிலவுவதாகவும் கஷ்டப்

பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்..

    Leave a Reply