23 இலட்சம் ரூபாவை திருடிய அதிகாரி

Spread the love

23 இலட்சம் ரூபாவை திருடிய அதிகாரி

தன்னிடம் இருந்த பணம் அடங்கிய பொதியினை இரண்டு நபர்கள் கொள்ளையிட்டு சென்றதாக

பொய்யான நாடகமாடிய, ஹெய்யன்துடுவ பகுதியை சேர்ந்த நிறுவனமொன்றின் நிர்வாக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தன்னிடம் இருந்த 23 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை வங்கியில் வைப்பில் இடுவதற்காக சென்ற போது கொள்ளையிடப்பட்டதாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, குறித்த நபர் தனக்கு நெருக்கமான இருவரை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தியமை தெரியவந்துள்ளது.

தான் பணிபுரியும் நிறுவனத்தின் பணத்தை தனது தேவைகளுக்காக செலவழித்த பின்னர், அதிலிருந்து தப்புவதற்காக இவ்வாறான பேலியான கொள்ளை நாடகமொன்றை அவர்

நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

    Leave a Reply