மேம்பாலம் அடியில் சிக்கிய விமானம்

மேம்பாலம் அடியில் சிக்கிய விமானம்
Spread the love

மேம்பாலம் அடியில் சிக்கிய விமானம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் ஒன்று பீகாரில் உள்ள மேம்பாலம் அடியில் வௌ்ளிக்கிழமை (29) சிக்கிக் கொண்டுள்ளது.

ஏற்கனவே விபத்து ஒன்றில் சிக்கி சேதமான இந்த விமானம் அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பீகார் மாநிலம் மோத்திஹரி பகுதியில் உள்ள பிப்ரகோதி என்கிற மேம்பாலத்தின் அடியில் விமானம் சிக்கிக் கொண்டது.

இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு, லொறி ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானம் வெளியில் எடுக்கப்பட்டது.

வீடியோ