முள்ளி வாய்க்கால் தமிழா சிரி

Spread the love

முள்ளி வாய்க்கால் தமிழா சிரி

அண்டி பிழைத்தவராம் – சிங்கள
அடி கழுவி நின்றவராம் ….
தொண்டுகள் இதுவாகி
தொழுதே திரிந்தவராம் …..

பண்டிகை அதுவாகி – தமிழன்
பலியில் சிரித்தவராம் ….
வெடி கொளுத்தி மகிழ்வில்
வெற்றி செய்தவராம் …..

காலம் முழுவதும்
கால் கழுவி நின்றவரை …
விட்டது பிழையென்று
விடயம் புரிந்தான் …

தட்டினான் தீ பற்றினான் ஊர்
தாரணி எல்லாம் கதறுதடா ….
கொட்டினான் தேளாகி
குளறுதடா கீழாகி ……

வராலாற்று தவறொன்று
வலிகள் புரிகிறது ….
வாடட்டும் தமிழா
வாய் கொட்டி சிரி….

நாடின்றி அவன் மடி
நக்கி பிழைத்தவர்கள் ….
கூடின்றி போகட்டும்
கூட்டடா வெடியதிர்வை….

ஆண்டுகள் முப்பது
ஆட்டம் போட்டவரை ..
கோட்டையில் இருத்தி
கொடி கட்டி மகிழ்ந்தவரை ….

வீட்டோடு எரிக்கிறான் – சிங்களன்
வீழ்ந்து சிரி தமிழா …
பாட்டு எழுதி படி – இது
பைந்தமிழன் வேலை ….

முறுக்கடா உன் மீசை – தமிழா
நறுக்கடா உன் பகையை …
புரிந்ததா புலி வீரம்
புண் பட்டு அழுவாய் ….

என்னடா சொன்னாய்
ஏதிலி என்றாய் ….
வாலாட்டி திரிந்தவரே – உன்
வாய் அறுத்தான் என் செய்வாய் ..?

நீறாகி எரியுதாடா
நீளமான உன் குடில்கள் ….
நக்கி பிழைத்தவனே
நாயாகி குலை ….

முக்கி முக்கி – தமிழன்
முன் எழுந்த வளர்ச்சியை- பகை
நக்கி நக்கியே நாராய் அறுத்தவா
நக்கி குலை …..

முதாலாளி உதைக்கிறான்
முனகாதே முன்னே வணங்கு …
சிலையாகி நிற்பாய் – அவன்
சித்திரம் வடிப்பான் ….

முள்ளி வாய்க்கால் தமிழா சிரி
முள்ளி வாய்க்கால் தமிழா சிரி

அல்லாவின் பிள்ளைகளே
அழுவதுவோ …?
சிரியுங்கள் இப்போது
இது உங்கள் சிம்மாசனம் …

முள்ளி வாய்காலில் – தமிழன்
முண்டமாய் வீழ்ந்த போது
பால்சோறு உண்டு பார்த்து சிரித்தவா
பறை கொட்டி வெடி ….

இது தான் உன் வேலை
இது தான் உன்வேலை …
இன்றேன் நீ அழுதாய் ..?
இடி தரும் வெடி எறிவாய்…!

  • வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -07-03-2018
  • வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply