மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம்

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம்
Spread the love

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்க பட்டு காத்தான் குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மட்டக்களப்பு காத்தான்குடி பாலமுனை கடற்கரை பகுதியில் மீட்க பட்ட பெண் யார் என்பது தொடர்பில்விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் இலங்கை பொலிஸார் குற்றவாளிகளை தேடுகின்றனர் .

இந்த பெண்ணின் மர்ம மரணத்தின் பின்புலத்தில் உள்ள கொலை குற்றவாளிகள் யார் என்பதை காத்தான் குடி பொலிசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை .

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம்

இந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட பின்னர் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என்கின்ற தகவல்கள் வெளியாகி வருகின்ற பொழுதும் ,அது தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் எதனையும் தெரிவிக்கவில்லை .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இவ்வாறான மர்ம கொலைகள் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை இலங்கை போலீசார் கண்டுபிடிக்க முடியாது திணறி வருகின்றனர் .

சீரியல் கில்லர் ஒருவர் இவ்வாறான கொலைகளை செய்து வருகின்றாரா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .

மகள்களை கற்பழித்த தந்தை

இங்கிரிய பகுதியில் தனது மகள்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த தந்தை செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

தாய் இறந்த நிலையில் மூன்று பெண் பிள்ளைகளும் தந்தையுடன் வசித்து வந்துள்ளனர் .

இவ்வாறான கால பகுதியில் 17 வயதான தனது மூத்த மகளை தந்தை ஐந்து வருடமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் .

இதே சமகாலத்தில் தனது இரண்டாவது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த தந்தை முனைந்ததை கண்ணுற்ற மூத்த மகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் .

அதனை அடுத்தே தற்போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் .