பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.

பேருந்து ஒன்றை
Spread the love

பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.

குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 39, 46, 53 வயதுடைய கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில்

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கராஜ மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக

விசாரணைகளுக்காக மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply