ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்
தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனையில், கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுடன், கடந்த சில தினங்களாக
நெருங்கி பழகியவர்கள், தங்களை தாங்களாகவே சுய தனிமையில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது