சீரற்ற காலநிலையால் 662 பேர் இடம்பெயர்வு

கிளிநொச்சியில் வெள்ளம் மக்கள் வெள்ளத்தில் அவதி
Spread the love

சீரற்ற காலநிலையால் 662 பேர் இடம்பெயர்வு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது