ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம் என அறிவித்துள்ளதால் செங்கடல் பகுதியில் பதட்டமாகும் மத்திய தரை கடல்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வன்முறை இராணுவம் ,பாலஸ்தீனம் மீதான தாக்குதலை நிறுத்தாவிடின் கப்பல்களை தாக்குவோம் என ஹவுதிகள் மீளவும் மிரட்டல் விடுத்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாத தாக்குதலை நடத்திவருகிறது .
ஏமன் ஹவுதி போர் படை
அதனால் காசா மக்களுக்கு ஆதரவாக ஏமன் ஹவுதி போர் படைகள் களத்தில் இறங்கி ,கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
இஸ்ரேல் ,அமெரிக்கா,பிரிட்டன் ,நாட்டு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
அதனை அடுத்து தற்போது மீளவும் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த ஹவுதிகள் அறிவிப்பால் ,மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
ரபா எல்லை ஊடாக மிக பெரும் தாக்குதல் நடத்திட இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது .
அவ்வாறான நிலையில் ஏமன் ஹவுதி போர் படைகள் பகிரங்கமாக அறிவித்துள்ள செயலினால் ,மீளவும் செங்கடல் ,மத்திய தரைக்கடல் வழியான கப்பல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட போவதை காண்பிக்கிறது .