காதல் விவகாரத்தால் ஒருவர் கொலை

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Spread the love

காதல் விவகாரத்தால் ஒருவர் கொலை


காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரத்தோட்டை – நிக்லோயாவத்த பிரதேசத்தில் இன்று (18) காலை இக்கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரத்தால் ஒருவர் கொலை

சம்பவத்தில் 39 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 05 சந்தேக நபர்களை ரத்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மகளுடன் ஏற்பட்ட காதல் காரணமாக ஏற்பட்ட தகராறால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.