காணமால் போனவர் சடலமாக மீட்பு

Spread the love

காணமால் போனவர் சடலமாக மீட்பு

வீட்டில் இருந்து காணாமல் போனவர் ,கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட்டுள்ளார்

குடும்பஸ்தரின் சடலம் ஒன்றே இவ்வ்ரு மீட்க பட்டு ,பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமல் போயிருந்தார்

இவ்வாறு காணமல் போன நிலையில் பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.

காணமால் போனவர் சடலமாக மீட்பு

குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள்

இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் தொடராக காணாமல் போபவர்கள் இவ்வாறு சடலமாக மீட்க பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததன் பின்னர் நீர் நிலைகளில் மர்மமான முறையில் மக்கள் சடலங்கள் மீட்க படுகிறது

இது தமிழர் பகுதியை மட்டும் இன்றி தென் இலங்கை ஆதிக்க வெறி சிங்களவர்கள் வசிக்கும் பகுதியிலும் சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன

அணைத்து மரணங்களும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுதே ஓரே விதமான முறையில் மரணங்கள் உள்ளதே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

இவை திட்டமிடப்பட்ட குழு ஒன்றினால் மேற் கொள்ள படும் மர்ம படு கொலைகளின் பின்புலம் என கருத படுகிறது

ஜே ஆர் ஜேவர்தனா இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய பொழுது ஜேவிபி சகோதர படுகொலையை ஆரம்பித்து வைத்தார் ,நீர் நிலைகளில் மிக கோரமான முறையில் ஜேவிபி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அடித்து வீச பட்ட நிலையில் அந்த ஆண் பெண் சடலங்கள் மீட்க பட்டன

அது போலவே இப் பொழுது இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .-வன்னி மைந்தன் –

    Leave a Reply