களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்
கிளிநொச்சி-பூநகரி சாமிப்புலம் கிராமத்தில் களவாக மணலுடன் சென்ற டிப்பரை விசேட அதிரடிப் படையினர் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
பிடிக்கப்பட்ட டிப்பரை மணலுடன் பூநகரி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், பூநகரி பிரதேசத்தில் தொடர்ச்சியாக மணல், மரக்கடத்தல்கள் இடம் பெறுவதன் காரணமாக அதனை தடுக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.