கிளிநொச்சியில் டிப்பர் பஸ் மோதல் படங்கள் உள்ளே
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் டிப்பர் பஸ் மோதல் படங்கள் உள்ளே

கிளிநொச்சியில் டிப்பர் பஸ் மோதல் படங்கள் உள்ளே

கிளிநொச்சியில் டிப்பர் பஸ் மோதல் படங்கள் உள்ளே

கிளிநொச்சியில் டிப்பர் பஸ் மோதல் படங்கள் உள்ளே இணைக்க பட்டுள்ளது .இன்று கிளிநொச்சி ஏ பிரதான வழியூடாக பயணித்த அரச பயணிகள் பேரூந்துடன் டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது .

இந்த விபத்தில் பேரூந்து மற்றும் டிப்பர் வாகனம் என்பன கடுமையாக சேதமடைந்தன .

இதன் பொது டிப்பர் வாகன சாரதி கடுமையான காயங்களுக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுள்ளதாக தெரியவருகிறது .

பேரூந்தில் பயணித்த மக்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அதிவேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

அறுபது பயணிக்களி காவிய படி பயணித்த பேரூந்துடன் இந்த டிப்பர் மோதியுள்ளது .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

கிளிநொச்சியில் இந்தியா இராணுவம் நுழைவு
Posted in YouTube Tamil News இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இந்தியா இராணுவம் நுழைவு

கிளிநொச்சியில் இந்தியா இராணுவம் நுழைவு

கிளிநொச்சியில் இந்தியா இராணுவம் நுழைவு மக்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

இந்தியா இராணுவம் இலங்கைக்குள்

இந்தியா இராணுவம் இலங்கைக்குள் தமிழர் பகுதிக்குள் மூன்றாவது முறையாக நுழைகிறது .

வன்னி மைந்தன் காணொளியில்

அடுத்து என்ன நடக்கும் என்பதை வன்னி மைந்தன் காணொளியில் வைத்து செய்கிறார் மக்களே பாருங்கள்.

CLICK HERE VIDEO

உடைத்த இரணைமடு கிளிநொச்சி மூழ்கும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

உடைத்த இரணைமடு கிளிநொச்சி மூழ்கும் அபாயம்

உடைத்த இரணைமடு கிளிநொச்சி மூழ்கும் அபாயம்

உடைத்த இரணைமடு கிளிநொச்சி மூழ்கும் அபாயம் காணப்படுவதை இந்த இரணைமடு குளத்தின் அணை உடைப்பு காண்பிக்கிறது .

திடீரென நீர் வரத்து

இவ்விதம் திடீரென நீர் வரத்து அதிகரித்தாலோ அல்லது ,அதிக மழை வீழ்ச்சி ஏற்பட்டாலோ கட்டு உடைத்தால் கிளிநொச்சி மூழ்கும் அபாயம் காணப்படுகிறது .

எனவே கிளிநொச்சி வாழ் மக்களே மிகவும் எச்சரிக்கை இருங்கள் .

இந்த கட்டு உடைப்பில் பல சந்தேகம்

இந்த கட்டு உடைப்பில் பல சந்தேகம் உள்ளது . இலங்கை இராணுவம் உடைத்து இருக்க கூடும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது .

சில விடயங்கள் இதனை காண்பிக்கிறது .

click here video

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் LIVE

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் LIVE

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் LIVE ,கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் கல்லறை வீரர் உறங்குமிடத்தில் சிறப்பான முறையில் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற தயாராகி கொண்டுள்ளது .

Mp ஸ்ரீதரன் தலைமையில் இங்கே மிக பெரும் நினைவு நிகழ்வாக கடை பிடிக்க படுகிறது

ஆயிர கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்த தயாராகி கொண்டுள்ளது எமது தாயாக பகுதிகள்

CLIK HERE LIVE

கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு

கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு

கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது .

தமிழர் தேசம் நாடளாவிய ரீதியில்

தமிழர் தேசம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது .அவ்விதம் இடம்பெற்று வருகின்ற இந்த நிகழ்வில் மாவீரர்

பெற்றோர்கள் அழைத்து மதிப்பளிக்க பட்டுள்ளனர் .

தமிழ் பெண்கள் தமது கலை நிகழ்வு

இந்த நிகழ்வில் தமிழ் பெண்கள் தமது கலை நிகழ்வுகளை நடத்தியுள்ளனர் .

தமிழர் தேசம் புத்துயிர் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

கிளிநொச்சி பூநகரி பகுதியில் மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு

கிளிநொச்சி பூநகரி பகுதியில் மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு

கிளிநொச்சி பூநகரி பகுதியில் மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு ,கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கௌதாரி முனை

மாவீரர்களது பெற்றோர்

பகுதியில் மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று(22-11-2025) நடைபெற்றுள்ளது.

மிகவும் பின்தங்கிய போக்குவரத்துவசதிகளேஇல்லாத பிரதேசமாக உள்ள கௌதாரி முனை பகுதியில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றுவரை

மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு

மாவீரர் பெற்றோர்களை கௌரவிப்பதோ அல்லது மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்று தங்களுடைய பிள்ளைகளுக்கான அஞ்சலிகளை

செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படாமலும் போக்குவரத்து வசதிகள் இன்றி


காணப்பட்ட மாவீர்ர்களின் பெற்றோர்கள் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான சண்முகராஜா ஜீவ ராஜாவின் ஏற்பாட்டில் மாவீரர்களின்

பெற்றோர்களை மதிப்பளித்ததுடன் அவர்களுக்கு உடுபுடவைகளையும் பயன் தரும் மரக்கன்றுகளையும் வழங்கி மதிப்பளித்துள்ளார்

கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள்

கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள்

கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள் ,கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு

இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

(02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிப்பர் வாகனமும், கிளிநொச்சியில் இருந்து பயணித்த மற்றொரு டிப்பர்

வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் தரித்து நின்ற போது,

டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து

அதனை டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றது.

விபத்தில் டிப்பர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு இருவர் படுகாயம்

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு இருவர் படுகாயம்

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு இருவர் படுகாயம் ,கிளிநொச்சி தட்டுவான் கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

பாழடைந்த வீடொன்றில்

பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது

இதன் போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு ,கிளிநொச்சி ஊற்றுப் புலப் பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு இறந்தவர் 68 வயதான பெண் எனவும் , வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் இவ்விதம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை மீட்ட போலீசார்

சடலத்தை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடல பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர் .

இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர்

தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர் நாள்தோறும் வீதிகள் பற்றை காடுகள் புதர்கள் நீர் ஏரிகள் பாழடைந்த வீடுகள்

என்பனவற்றிலிருந்து தமிழர்களுடைய சடலங்கள் தொடராக மீட்கப்பட்டு வருகிற அவலம் தொடர்கிறது .

இது 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கை ஒன்றாகவே இதனை பார்க்க முடிகிறது.

ஆகவே இந்த படுகொலைகள் யாவும் மர்மமாகவே தொடர்ந்து நிலை பெறுவதால் தமிழர்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்
Posted in இலங்கை செய்திகள் வன்னி மைந்தன் உதவி

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்


கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல் ,மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் காந்தன்
வன்னி மைந்தன் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள 100 மிதிவண்டி

திட்டத்தின் அடிப்படையில் 45 ஆவது முதல் 49வது மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

5 மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மிதிவண்டிகளை லண்டனில் உள்ளயெயா என அழைக்கப்படும் காந்தன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார் .

அவர் வழங்கிய ஒரு லட்சத்து 35 ஆயிரம் நிதி பங்களிப்பில் இந்த ஐந்து மிதிவண்டிகள். தலா ஒன்று 27 ஆயிரம் ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் புண்ணியமூர்த்தி

இந்த நிகழ்வை முன்னெடுத்து ஒருங்கிணைத்த முன்னாள் அதிபர் புண்ணியமூர்த்தி அவர்களுக்கும், பாடசாலை இந்நாள் அதிபருக்கும் , பாடசாலை மாணவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து நமக்கு தோளோடு தோள் கொடுத்து உதவி புரிகின்ற அணைத்து உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாடசாலைக்கு இந்த ஐந்து மிதிவண்டிகளை வழங்கிய அண்ணன் காந்தன் அவர்களுக்கு மீளவும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி அண்ணா.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை
Posted in இலங்கை செய்திகள்

சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை

சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை

வடக்கு மாகாணத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் போதை சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் அகப்பட்ட போதை.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது இளைஞனின் உடைமையில் இருந்து 2 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை, வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து 20 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

அதனையடுத்து போதை மாத்திரைகளுடன் கைதான இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி போதை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவ புலனாவுத் துறையினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கஅமைய கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பொலிஸ்மா அதிபரின் கீழ் உள்ள சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் மூன்று பார்சல் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இருப்பினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி கிணறுகளில் மலத்தொற்று
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கிணறுகளில் மலத்தொற்று

கிளிநொச்சி கிணறுகளில் மலத் தொற்று

கிளிநொச்சி கிணறுகளில் மலத் தொற்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளி வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

ஏனைய தேவைகளும் நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நீரில் ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலத்தொற்றை நீக்கியாக குளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வைத்தியசாலையில் கிணற்றில் காணப்படும் மலத்தொற்று கிருமிகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்ளின் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நகரையும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் பெரும்பாலான கிணறுகளில் மலத்தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தின் நகரையும் நகரை அண்டிய பகுதிகளின் பொது கிணறுகள் உள்ளிட்ட சில கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பல கிணறுகளில் மலத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.

எனவே பொது மக்கள் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்ற போது நன்கு சுட வைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது கிணற்றில் குளோரின் இட்டு தொற்று நீக்க வேண்டும் என சுதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,

பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது

கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது

கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது மிகப்பெரும் வரலாற்று சாதனையாக இலங்கை தமிழரசு கட்சி வீடு வென்று வெற்றியை சூட்டியுள்ளது .

மே மாதத்தில் இடம்பெற்ற தமிழின படுகொலை நாளில் எங்கள் மக்களை அடகு வைத்து விடலாம் என எண்ணிக்கொண்டிருந்த சிங்கள பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது .

எங்களது மக்கள் மகத்தான வெற்றியை வீட்டு சின்னம் இலங்கை தமிழர் கட்சிக்கு சூடி வெற்றிவாகை தந்துள்ளார்கள்.

எங்கள் மண்ணும் மக்களும் , தன்மானமும் தமிழருடைய ஓர்மமும் தொட்டு நிலத்தை வேற்று ஆணவ அதிகாரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி கோடிட்டு காட்டுகிறது.

இலங்கைத் தமிழரசக் கட்சி மிகப் பெரும் சாதனையை படைத்த நிலைநாட்டியுள்ளது.

அதன் அடிப்படையில் கரைச்சியில் 21 கதிரையில் 20ஆசனம் வீட்டுக்கு கிடைத்துள்ளது .

பூநகரியில் 11 ஆசனங்களில் 10 ஆசனம் வீடு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது .

பள்ளியில் 8 ஆசனங்களில் 6 ஆசனம் வீட்டுக்கு மிகப்பெரும் சாதனையை கிளிநொச்சி கோட்டையை சுருட்டி இருக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறுதரும் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.

குளிர்ச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம்

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம்

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம் ,16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுனர் கைது செய்யப்படுவார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன்
சனிக்கிழமை (12) தொடர்புகொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், குறித்த

விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது

செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது. 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை என்பது மிகப்பெரிய சமூக அனர்த்தம்.

ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை , போக்குவரத்து போலீசார் மோப்ப நாய்களுடன் திடீரென சுற்றிவளைக்க பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள் சட்ட விரோதச் செயற்பாடுகள் ஈடுபடுவோர்களை கண்டறிய நோக்குடன் இந்த சோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீதியில் வைத்து வாகனங்களை சோதனைக்கு உட்படுத்து நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு

வருவதால் திருட்டு செயல்களில் மற்றும் சமூகவிரோதசியில் ஈடுபட்டுள்ளவர்கள் தற்போது பதறி அடித்து ஓடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் தேதி நத்தார் பண்டிகையின் போது இன்னல்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விசேட சோதனை மற்றும் காவல் பாதுகாப்பு நடவடிக்கையில்

இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

நத்தார் பண்டிகையில் எவ்வித குழப்பங்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் ஏதேனும் ஒரு செயல்கள் மக்களுக்கு ஏற்பட்டு

வீடியோ

விடக்கூடாது என்பதற்காகவே போலீசார் வேதாத சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .

இவ்வாறு போலீசாரே மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன .

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி வேண்டி அரை மணித்தியாலங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா, இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் மக்கள் வாழ்வு இப்படித்தான் இருக்கிறது .

வன்னி மைந்தன் ஆகிய எனது டிக் டாக் நேரலையில் மருத்துவர் அர்ச்சுனா கலந்து கொண்டு கூறிய கருத்திற்கு இனங்க இந்த காட்சிகளை காண் பித்துள்ளார் .

இப்பொழுது மக்களே உங்கள் மன நிலை என்ன ..? 1950ஆண்டுகளில் எப்படி வளர்ச்சி இன்றி இந்த பகுதிகள் காணப்பட்டனவோ ,அதேபோல யன்னல்கள் இல்லாது ,கதவு இல்லாது உண்ண உணவின்றி மக்கள் இப்படித்தான் இருக்காங்க .

அரசியல் வாதிகளை நம்பி ஏமாந்து போனோமா ..இல்லை அறிவற்ற தனத்தில் சிந்தனை திறன் அற்று இருக்கிறோமா .இனியேனும் கொஞ்சம் சிந்தி மக்கள் .

இதோ வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட காணொளியை காண்க .

வீடியோ

https://www.youtube.com/watch?v=PM9ICXRpObM
அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி
Posted in இலங்கை செய்திகள்

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி நிறுவப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது .

தமிழ் அரசியல்வாதிகளின் முக்கிய எம்பியாக யாழ்பாணத்தில் விளங்கி வரும் அங்கயன் அவர்களினால் கிளிநொச்சியில் திறந்து நடத்த பட்டு வரும் விடயம் வெளியாகியுள்ளது .

கிளிநொச்சியில் இதுவரை 15 பார்கள் நடத்த பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இவை யாவும் தமிழ் அரசியல் வாதிகளின் பெயரில் இயங்கி வருவதாக குற்றம் சுமத்த பட்டுளள்து .

இவ்வாறு சாட்ட பட்டுள்ள குற்றங்கள் இந்த கடிதம் மூலம் தெரிய வந்துள்ளதக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது .

இதற்கு பாராளுமன்ற அங்கயன் என்ன தெரிவிக்க போகிறார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம் ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜாவின் தலைமையில், மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும்

உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நாளை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில், மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிடம் நேரில் சமர்ப்பிக்கப்படவுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;

எதிர்வரும் 2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், உள்நாட்டு தமிழ் வாக்காளர்களிடையேயும், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்

மத்தியிலும், அரசியற் கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ள பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஆழமாகவும், விசாலமாகவும் கருத்தூன்றி ஆராய்ந்து, பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு காலம் எம்மை நிர்ப்பந்தித்திருக்கிறது.

அதனடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினராகிய நாங்கள், கட்சியினுடைய இணக்க விதிகளுக்கு உட்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும், சிவில் சமூகம் மற்றும் மதகுருமார்களுடனும், பொதுமக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி

பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், 2024.08.30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டக் கிளையாக ஒன்றிணைந்து, ஏகமனதாக எடுத்த கீழ்வரும் தீர்மானத்தை, மத்திய செயற்குழுவின் அனுமதிக்காக தயவுடன் முன்னளிப்புச் செய்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற நிலைப்பாட்டை பொறுப்போடு ஆராய்ந்து, நிகழ்கால இலங்கையினுடைய ஆட்புல

ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தமிழ் மக்களினுடைய இனத்தேசிய அடிப்படையில் நின்று பொருத்தமான உபாயம் ஒன்றை நாம் சிந்திப்பது காலத்தேவையானது என்று நம்புகின்றோம்.

போருக்குப் பிந்திய 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில், எதிர்பார்க்கப்பட்ட நற்பலன்களை விட பிரதிகூலமான வெளிப்பாடுகளையே தமிழ்மக்கள் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது என்பது கசப்பானது எனினும் அதுவே உண்மையானது ஆகும். போர் ஒன்றின் பின்னராக தோல்வியடைந்த

மனநிலையில் விடப்பட்ட தமிழ்ச்சமூகத்தை அதிலிருந்து மீட்டெடுக்கும் பணியையே எமது அரசியல் இயக்கம் பிரதான பணியாகக் கொண்டிருந்தது. எனினும் உள்நாட்டுக்கு உள்ளேயும், சர்வதேச சமூகத்தோடு இணைந்தும், எமது இராஜதந்திர, புத்திபூர்வமான அணுகுமுறைகள் ஊடாகவும் எமது

மக்களின் வலிகளுக்கு நிவாரணம் வழங்கவோ, அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்பவோ இயலாதிருந்திருக்கின்றோம் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் ஒன்றை இந்தத் தேர்தல் எங்களுக்குத் தந்திருக்கின்றது.

கூருணர்வு மிக்க அரசியல் திறன், அணுகுமுறை மற்றும் சர்வதேச சமூகத்தின் வாஞ்சையைப் பெற்றுக்கொள்ளல் என்பதில் நிலைதளர்ந்து போயுள்ள சூழல் குறித்து தமிழ்த்தேசிய ஆர்வலர்களிடமும், அறிவுஜீவிகளிடமும், சாதாரண

பொதுமக்களிடமும் எதிர்காலம் பற்றிய ஐயுறு நிலை அதிகம் வளர்ந்துள்ளமையை மக்கள் பிரதிபலித்து வருகிறார்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது.

மேற்படி இக்கட்டான சந்தர்ப்பம் ஒன்றில் போரின்போதும், போருக்குப் பின்னரும் நிகழ்ந்துவரும் இழப்புகளுக்கு பரிகாரம் காணவும், சர்வதேச அணுகுமுறைகளில் விருத்தியை ஏற்படுத்தவும், ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை வலுப்படுத்தி சர்வதேச குற்றவியல்

நீதிமன்றத்தில் நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டை வழிப்படுத்தவும், மீள நிகழாமையை வலியுறுத்தி தாயகத்தில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரவும் முன்னகர்ந்து செல்லவேண்டிய தலைமைத்துவத்தை எமது மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

அறிவுபூர்வமானது என்று நம்பப்படும் கருத்தியல்களுக்கும், எமது மக்களினுடைய உணர்வு நிலைகளுக்கும் இடையிலான போராட்டமாக இந்தத் தேர்தல்களம் விரிந்துள்ளமையால், மக்கள் எது சாத்தியம் என்று நம்புகின்றார்களோ, அவற்றைக் கவனமாக ஆராய்ந்து, தமிழ்த்தேசிய

உணர்வுத் தளத்துடன் இணைந்த தீர்மானம் ஒன்றை, அதன் உயிர்நாடியாக விளங்குகின்ற இலக்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமான முறையில்

முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே பெரும்பான்மைத் தமிழ் மக்களுடைய கருத்துநிலையாக உள்ளது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

மேற்படி விடயங்கள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியிலும், அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பொதுசன அபிப்பிராயமாகப் பெற்று எமது மாவட்டக் கிளையும், பிரதேசக் கிளைகளும், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து, கள யதார்த்தத்தின் அடிப்படையில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய கொள்கை நிலைப்பாட்டைப் பாதுகாத்து, மக்கள் மத்தியில் எமது அரசியல் இயக்கம் நெருங்கிச் செயற்படும் வகையில் தாயகத்தின் சிவில் அமைப்புகளினாலும், தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள பெரும்பான்மைக் கட்சிகளினாலும் முன்மொழியப்பட்டுள்ள

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகிறோம் – என்றுள்ளது.