எண்ணெய் கப்பல் மீது குண்டு தாக்குதல் – பற்றி எரியும் கப்பல்
மத்திய கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஓன்றின் மீது குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் தற்போது அந்த கப்பல் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது ,Banyas துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்த இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இஸ்ரேல் இந்த தாக்குதலை உளவு விமானம் மூலம் நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது
இஸ்ரேல் ,ஈரான் என்பன தற்போது கடல்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளன ,இதனால் நாடுகளுக்கு
இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் ,கடல்வழி போக்குவரத்து தடைப் படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இதுவரை இந்த கப்பல் மீது யார் தாக்குதல் நடத்தியது என்பது தொடர்பாக தெரியவரவில்லை ,முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை