ஈரான் இராணுவ தளம் மீது- இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு
ஈரான் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் நேரடி மோதல்கள் இப்பொழுது வெடித்துள்ளன ,இதன் தாக்குதல்கள் தொடராக இடம்பெற்று வரும் நிலையில் சிரியாவில் உள்ள ஈரானின் ஏவுகணை
இராணுவவ தளம் மீது இஸ்ரேல் இராணுவத்தின் விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன
இந்த தாக்குதலில் அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த ஏவுகணைகள் அழிக்க பட்டு அந்த இராணுவ
தளத்திற்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ,ஏவுகணைகள் வெடித்து சிதறியுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது
எனினும் இது தொடர்பில் ஈரான் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை ,ஈரான் அணு
உலைமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது ,அதற்கு பதிலடியாக இஸ்ரேல் அணு உலைமீது சில
நாட்களுக்கு முன்னர் ஈரானும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,அதன் உச்ச கட்ட தாக்குதல்
நடவடிக்கையாக இந்த இராணுவ தளம் மீது இப்பொழுது தாக்குதல் நடத்த பட்டுள்ளது
உச்சம் பெற்றுள்ள இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் பெரும் போராக
வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது