இந்திய மீனவர்கள் 13 பேர் கைது

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
Spread the love

இந்திய மீனவர்கள் 13 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (14) மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் 13 பேர் கைது

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.