கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை
PCR பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்கள் இருவர் நேற்று (07)
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கடற்படை வீரர்கள் இருவரும், வெலிசறை கடற்படை முகாமில் கடமை புரிந்து வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் கொவிட் -19
தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து சிகிச்சைக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண
குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 07 பேர் கொழும்பு கடற்படை பொது
வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களின் பி.சி.ஆர் சோதனைகளில் இவர்களுக்கு வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி 2020 மே 06 ஆம் திகதி
அவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் மேலும், வைத்தியசாலைகளில் இருந்து
வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு
தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நபர்கள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 கடற்படை வீரர்கள் முழுமையாக
குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.
- அருளினி பாட்டால் அழுத மக்கள்
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு