500 பேருடன் நடு கடலில் தடுத்து வைக்க பட்டுள்ள அகதிகள் கப்பல்
மியன்மாரில் இடம்பெற்று வந்த பவுத்த பேரினவாத அரசின் அடக்கு முறையில் சிக்கி
ரோகினிய மக்கள் பெருமளவு பாதிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு அரச வன்முறையில் சிக்கி பாதிக்க பட்ட மக்கள் தமது உயிரை
காப்பாற்றி கொள்ளும் நோக்குடன் அகதிகளாக பங்களாதேஸ் நாட்டுக்குள்
நுழைவதற்கு வருகை தந்த பொழுது அனைவரையும் நுழைய விடாது
தடுத்து வைக்க பட்டுள்ளனர்,இரு மீன்பிடி கப்பல்களில் ஏற்ற பட்ட ஐநூறு மக்கள் இவ்வாறு தடுத்து வைக்க பட்டுள்ளனர்
இந்த அகதிகள் கப்பலில் சிறுவர்கள் ,பெண்கள் உள்ளிட்டவர்கள் உள்ளமை குறிப்பிட தக்கது