29 தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் கைது
இன்று நடைபெற்ற வாக்களிப்பில் 29 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வாக்குப்பெட்டிகளை
பாதுகாப்பாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.