ஏன் என்னை விட்டு விலகினாய் ..?

Spread the love

ஏன் என்னை விட்டு விலகினாய் ..?

நித்தம் உன்னை பாடிட தானே
நிகழ் காலம் துடிக்கிறேன்
கத்தும் கடல் போல உன்னை
காண தானே தவிக்கிறேன்

பட்ட துயர் மறைந்திட தானே
பகலே உன்னை அழைக்கிறேன்
வித்துடல் ஆகிட முன்னே
விழி காட்டு அழைக்கிறேன்

ஒருமைக்கும் பன்மைக்கும் இடையிலே
ஓடி உறவாடினாய் – இன்று
ஓடி ஓடி மறைவதென்ன
ஒரு தரம் பதில் சொல்லாய்

விடியுமா அந்த கிழக்கு – ஒளி
தருமா வந்து எனக்கு
ஏனோ வானில் மறைந்தாய்
இருளை அள்ளி விதைத்தாய் ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 08-11-2021

    Leave a Reply