விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது

ஐவர் படுகொலை - இரண்டு பெண்கள் கைது
Spread the love

விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது

20 விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு உதவி செய்த சந்தேகிக்கப்படும் 10 பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று (07) வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.