வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது

Spread the love

வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது

வவுனியாவில் இரு வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (18.07) தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது கூமாங்குளம் பகுதியில் 5கிராம் 140மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது

அத்துடன், வேப்பங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 5கிராம் 100மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளையும் வவுனியா நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.