யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

Spread the love

யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்றத்தின் போது பூசகர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டால் கொடியேற்றம் தடைப்பட்டதுடன், பொலிசார் தலையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக நேற்று(09) காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது.

குறித்த ஆலயத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில் இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் முன்நின்று நடத்துவதென இரண்டு பூசர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது.

யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

இந்நிலையில் இவ் வருட மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் நடத்துமாறு கடந்த 6ஆம் திகதி யாழ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

எனினும் நேற்று முன்தினம்(08) மகோற்சவ முன்னேற்பாட்டினை மேற்கொள்ள முயன்றபோது மற்றைய பூசகர் ஆலயத் திறப்பினை கையளிக்காத்தால் முரண்பாடு நிலவியுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் நீதவான் நீதிமன்றில் நேற்று(09) வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீண்டநேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் கருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முற்படும்துமாறும் நீதவானால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனடிப்படையில் நேற்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.

No posts found.