யானையுடன் கொழும்பில் போராட்டம்
யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி பல சிவில் அமைப்புக்கள் மற்றும்
சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை புதன்கிழமை (18) காலை நடத்தியது.
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏறக்குறைய 300 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யானைகளுக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு எனவும் யானைகள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்
எனவும் இல்லையெனில் யானைகள் எதிர்காலத்தில் புகைப்படங்களில் மட்டுமே காணப்படுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட குழு சுட்டிக்காட்டியுள்ளது.
யானையுடன் கொழும்பில் போராட்டம்
யானைகள் – மனித மோதலினால் ஹக்க பட்டாசுகளினால் 651 மரணங்கள் பதிவாகி உள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியது.மேலும், யானைக் காணிகளை
பாதுகாக்குமாறும், யானை வழித்தடங்களைத் தடுக்க வேண்டாம் என்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளை பிரதிநிதிகள் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறிய யானையொன்றையும் நிர்மாணித்து,
போட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை