மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு
தென்மராட்சி – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் ஞாயிற்றுக் கிழமை (08) காலை தனது கால்நடைகளை கொண்டு சென்ற பெண் ஒருவரால் குறித்த ஆயுதங்கள் வயல் பகுதியில் பற்றையோரமாக இருப்பது தெரியவந்துள்ளது.
மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு
இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆயுதங்களை பார்வையிட்டதுடன் அவ்விடத்தில் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த ஆயுதங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
- பதுளை விபத்தில் ஒருவர் பலி
- தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
- O/L பரீட்சையில் முறைகேடு
- போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- யாழில் வீடொன்று முற்றுகை
- பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்
- நில ஆக்கிரமிப்பில் இலங்கை
- வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
- மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்