O/L பரீட்சையில் முறைகேடு

O/L பரீட்சையில் முறைகேடு
Spread the love

O/L பரீட்சையில் முறைகேடு

O/L பரீட்சையில் முறைகேடு ,நடைபெறும் கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தேர்வு எழுதியவர்கள் நேற்று வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி படம் எடுத்து மற்ற தரப்பினருக்கு அனுப்பி விடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை நிலையங்கள்

பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கல்வியால்கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி புதிய சிந்தனை ஊடாகவே ,இலங்கையில் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் .

ஆனால் அதனை தவிர்த்து இலங்கை அரசு கல்வியால் கொள்கையில் சீரான மாற்றநகை ஏற்படுத்து மறுத்து வருவதால் இவ்விதமான குற்ற சத்துக்கள் மோசடிகள் முன்வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .