மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Spread the love

மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

மில்லனிய, கிம்மன்துடாவ பகுதியில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டதாக மில்லனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மில்லனியா கிம்மன்துடாவ பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான திஷான் சங்கீத் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரியின் கணவன் தனது மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனமொன்றில் அடகு வைத்து உயிரிழந்த நபருக்கு 120,000

ரூபாவை வழங்கியுள்ள நிலையில், அதனை உரிய வகையில் செலுத்ததாத காரணத்தால் ஏற்பட்ட தகராறு நீண்டதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்டவரின் வீட்டிற்கு தனது சகோதரனுடன் வந்த மைத்துனரான குறித்த நபர், வாய்த்தர்க்கம் நீண்டதில் தான் மறைத்து

வைத்திருந்த கத்தியால் உயிரிழந்த நபரின் தலை, முதுகு மற்றும் மார்புப் பகுதிகளில் குத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மில்லனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ